Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

30க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று கொண்டிருந்த பஸ் நுவரெலியாவில் விபத்தில் சிக்கியது! (வீடியோ)



நுவரெலியா பகுதியிலிருந்து லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு லபுக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த பஸ் பிரதான வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ள நிலையில் , நால்வர் மாத்திரம் காயமடைந்துள்ளனர்.


சாரதியால் வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

காயமடைந்த நால்வரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments