Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நுவரெலியாவிலிருந்து பதுளைக்கு அரிசியுடன் சென்ற கனரக வாகனம் விபத்துக்குள்ளாகி வீட்டையும் சேதப்படுத்தியது!

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.



இந்தச் சம்பவத்தில் கனரக வாகன சாரதி படுகாயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவையிலிருந்து வெலிமடை பதுளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லொறி சென்று கொண்டிருந்த இந்த கனரக வாகனம் செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டையிழந்த கனரக வாகனம் வீடொன்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் வீட்டுக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டினுள் யாரும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments