Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரசாங்கத்தில் பதவிகளை பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்க நடவடிக்கை



கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கமைய, மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மற்றும் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் பதவிகளிலிருந்தும் சம்பந்தப்பட்டவர்களை நீக்குவதற்கு கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த தீர்மானத்தை கடிதம் ஊடாக உரியவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

அவர்களில் மஹிந்த அமரவீர, நிமல் ஸ்ரீபால டி சில்வா, லசந்த அழகியவண்ண, சாந்த பண்டார, சுரேன் ராகவன், சாமர சம்பத் தசநாயக்க, ஜகத் புஷ்பகுமார மற்றும் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் அரசாங்கத்துடன் தொடர்புபட்டுள்ளதுடன், அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில், மஹிந்த அமரவீர, நிமல் ஸ்ரீபால டி சில்வா, லசந்த அழகியவண்ண, சாந்த பண்டார, சுரேன் ராகவன், சாமர சம்பத் தசநாயக்க, ஜகத் புஷ்பகுமார மற்றும் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

துமிந்த திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர, சாரதி துஷ்மந்த மித்ரபால, ஷான் விஜயலால் டி சில்வா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் செயற்படுகின்றனர்.

Post a Comment

0 Comments