Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வான் கதவுகள் திறப்பு - மண்சரிவு அபாயம்!


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடும் மழை பெய்து வருகிறது.

கடந்த தினங்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவேகமாக உயர்ந்துள்ளன.

தலவாக்கலை பகுதிக்கு பெய்த கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் இன்று (03) காலை நீர் மட்டம் உயர்ந்து 2 வான் கதவுகள் இரண்டரை அங்குலம் உயரமாக திறக்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்த்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா உள்ளிட்ட வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.

இதேநேரம் மழையுடன் இடையே கடும் காற்றும் வீசுவதனால் பல பிரதேசங்களில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளன.

தொடர் மழை காரணமாக காசல்ரி, கெனியோன், மவுசாக்கலை, நவலக்ஸபான, விமலசுரேந்திர உள்ளிட்டு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன.

எனவே, இந்த நீர்த்தேக்கத்திற்கு கீழ் வாழும் மக்கள் மற்று நீர் நிலைகளுக்கு சமீபமாக உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments