![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ7prRJ5K_RLD60iTUIhd2C04RCXi4MP_mjzMnFEDdpbcHYiT8El0cN4N8IBpTsfiz6VHn9eYI80Dc9fMukJKQxXxTFPLAxw4Ti12KQjX5n2Z3nOxiABZU6zDArfmYfmm2FFi4UbyeWOzGL-hBB9u1aeAP7P88gqaIip3e4oxGdM60CrvSfI1Hh_FU/s16000/2229149C-01E5-4401-8696-6ECCE8206135.jpeg)
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் கடந்த திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310-ஆக அதிகரித்துள்ளது.
2 ஆயிரத்து 43 பேர் காயமடைந்தனர். 61 ஆயிரத்து 800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
40 பேரைப் பற்றிய விவரங்கள் தெரிவில்லை. மேலும், 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், 31 பள்ளி கட்டடங்களும், 124 வழிபாட்டுத் தலங்களும், 3 மருத்துவமனைகளும் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளன.
0 Comments