Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

USA: கடுங்குளிர்; உயிரிழப்பு 38ஆக அதிகரிப்பு…!


அமெரிக்காவில் கடுங்குளிரிலும் பனியிலும் உயிரிழந்தர்வர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

நியூயோர்க் மாநிலத்தின் பபலோ நகரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பனிப்புயல் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

பல்லாயிரம் விமானப் பயணங்கள் தடைப்பட்டதால் பலர் கிறிஸ்மஸ் தினத்தன்று குடும்பத்தைப் போய்ப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. 250,000க்கும் அதிகமான வீடுகளும் வர்த்தகங்களும் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றன.

சில மாநிலங்களில் வெப்பநிலை பூஜ்யத்துக்குக் கீழ் 45 டிகிரி செல்சியஸைத் தொட்டது.

கனடாவில் ஒன்டாரியோ, கியூபெக் மாநிலங்கள் பனிப்புயலை எதிர்கொண்டன.

கியூபெக் மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று (25) 120,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன. சில வீடுகளுக்கு மின்சக்தி திரும்பச் சில நாட்கள் வரை பிடிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments