Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ரஜினிகாந்த் கைது! குடிபோதையில் விமான நிலையத்தில் சண்டை.. வெளியான அதிர்ச்சி தகவல்.


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் ரஜினிகாந்த். ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் பிரபல நடிகராக உயர்ந்தார்.

தற்போது இவர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சுனில், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ரஜினிகாந்த் கைது

சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அது என்னவென்றால் நடிகர் ரஜினிகாந்த் 1978 -ம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்தவுடன் சென்னை திரும்பியுள்ளார்.

அப்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் மது அருந்தி போதையில் சென்றுள்ளார். ரஜினி, அவர் நண்பரிடம் தகாத வார்த்தையால் தாக்கி பேசினார்.

இதனால் இருவருக்கும் சண்டை வெடித்தது. அந்த நேரத்தில் விமான அதிகாரிகள் சமாதன படுத்த முயன்றார்கள் ஆனால் ரஜினி மோசமாக சண்டை போட்டாராம். அவரை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணாடி அறையில் இருக்க வைத்தார்களாம்.

ரஜினி கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்தாராம். கடைசியில் ஹைதராபாத் போலீசார் அவரை கைது செய்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை தற்போது சிலர் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
 
ரஜினிகாந்த் கைது! குடிபோதையில் விமான நிலையத்தில் சண்டை.. வெளியான அதிர்ச்சி தகவல் | Rajinikanth Arrested Due Consuming Alcohol

Post a Comment

0 Comments