Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

1967 எல்லையுடன் கூடிய சுதந்திரமான பாலஸ்தீனத்தை உறுதி செய்ய வேண்டும் ; சவூதி தெரிவிப்பு…!



காஸாவில் பொதுமக்களை எந்த வடிவத்திலும், எந்த காரணத்தை கூறியும் குறிவைப்பதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக, தனது திட்டவட்டமான எதிர்ப்பை சவுதி பட்டத்து இளவரசர் பிரதமர் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை மீண்டும் தெரிவித்தார்.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) ஆகியவற்றின் உச்சி மாநாட்டின் போது சவுதி பட்டத்து இளவரசர் ஒரு முக்கிய உரையை ஆற்றினார்.

1967 எல்லையுடன் கூடிய சுதந்திரமான பாலஸ்தீனத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி, நிரந்தர அமைதிக்கான இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

காசாவில் பொதுமக்கள் வன்முறைக்கு உள்ளாகும் நேரத்தில் GCC-ASEAN கூட்டம் நடைபெறுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

GCC - ASEAN உறவுகளில், வர்த்தக பரிமாற்றம் 137 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இது GCC இன் உலக வர்த்தகத்தில் எட்டு சதவிகிதம் ஆகும்.

இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கும், அனைத்து களங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments