Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

காசாவுக்கு சென்ற மனிதாபிமான உதவிகள்: "தேவைகள் மிக அதிகம்" என உலக சுகாதார நிறுவனம் தகவல்...!


இஸ்ரேல்-ஹமாஸ் போர் நேற்று 3-வது வாரத்தை எட்டிய நிலையில், ராபா எல்லை வழியாக காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றன.

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு சார்ந்த செய்திகளை வெளியிடும் யுரேசியா குரூப் நிறுவனர் இயான் பிரேமர் கூறுகையில்,

இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கினால் முஸ்லிம் நாடுகளில் கொந்தளிப்பு ஏற்படும். பாலஸ்தீன மக்களுக்காகவும் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. இதே சூழல் நீடித்தால் அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா, சீனா தலைமையில் எதிரணியும் போரில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. 

எனவே,இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 3-ம் உலகப்போராக மாறக்கூடிய ஆபத்து அதிகம் இருக்கிறது” என்று கூறினார்.

Post a Comment

0 Comments