Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை.


 மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை காரணமாக அக்குறணை நகரின் ஊடாக பாயும் பிரதான நீரோடையும், துனுவில வீதி ஊடாக செல்லும் வஹகல ஓயாவும் நிரம்பியதால் அக்குறணை நகரம் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நகரம் நீரில் மூழ்கியதால், A9 வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டதுடன், வெள்ளம் இருந்த போதும் செல்ல முயற்சித்த பஸ் மற்றும் லொறி ஒன்று வெள்ளத்தில் சிக்கி, பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அக்குறணையை அண்மித்த பல வீடுகளிலும் வெள்ளம் புகுந்ததுடன் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

அக்குரணை நகரம் ஒரு மாதத்தில் நீரில் மூழ்குவது இது ஐந்தாவது முறையாகும்.




Post a Comment

0 Comments