Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மேல் மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிப்பு...!



பாடசாலைகளில் பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் மேல் மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சை நடைபெறும் திகதிகள அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான முதலாம் பாகத்திற்கான பரீட்சை நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பகுதி இரண்டிற்கான பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த ஆங்கில மொழிப் பரீட்சையும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

நன்றி...
Daily-Ceylon

Post a Comment

0 Comments