![](https://cdn.ibcstack.com/article/81fa38f6-dd7e-47ac-8445-8717d9d3f537/24-661e69cbd01a1.webp)
ஓமானில் ஏற்பட்ட கனமழையால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலையால் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
அத்துடன் கடும் மழை காரணமாக வாகனங்கள் மற்றும் உடைமைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கும் நடவடிக்கை:
இதேவேளை சீரற்ற காலநிலை நிலவும் அனைத்து பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அடுத்த சில நாட்களில் வடகிழக்கு மற்றும் வடக்கு ஓமன் முழுவதும் மிதமான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
0 Comments