Trending

6/recent/ticker-posts

நேருக்கு நேர் இரு பஸ் வண்டிகள் மோதி பாரிய விபத்து! பலர் வைத்திய சாலையில்.



கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் இன்று (19.06.2024) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



விபத்தில் காயமடைந்த மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment

0 Comments