Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வெளி நாடுகளிலிருந்து வருவோர் வீசாக்கள் இருப்பதாக பெரும் மோசடி…!


வெளிநாடுகளிலிருந்து வரும் யாழ். நபர்கள், கிராமப் புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும், நுழைவிசா மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.வெளிநாடுகளிலிருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபா வரையிலான பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் இவர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர்.

இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, இந்த மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும், விழிப்பாகவும் இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments