Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மற்றுமொரு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு…!


கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதில ளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நிகழ்ச்சி நிரலை இன்று அல்லது நாளை தயாரிப்பது தொடர்பிலும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை தொடர்பாகவும் ஜனாதிபதி தனது விஷேட உரையில் சபையில் தெளிவுபடுத்தினார்.

அது தொடர்பில் மீண்டும் இந்த சபைக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.



அந்த வகையில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப் பட்டுள்ளதுடன் மற்றுமொரு உடன்படிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.



அந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதும் இணக்கப்பாட்டுடன் அது சம்பந்தப்பட்ட பிரிவின் தகவல்களோடு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது கேள்வியின்போது;

கடன் மறு சீரமைப்பு தொடர்பில் இரண்டு உடன்படிக்கைகள் மாத்திரமே கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அவ்வாறானால் மேலும் ஒரு உடன்படிக்கை காச்சாத்திடப்படாத நிலையிலேயே அது பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிழலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்பட்டுள்ளமை முறைகேடானதென்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி..
தினகரன்

Post a Comment

0 Comments