Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் கைது…!


கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் வாரியபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாரியபொல பகுதியைச் சேர்ந்த (67) வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கடந்த (27ஆம் திகதி) விமான நிலைய முகாமையாளருக்கும் விமான நிறுவனத்துக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அழைப்பிற்குப் பிறகு, விமான நிலைய செயல்பாடுகள் தடைபட்டன, விமான நிலையமும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் விமானங்கள் தாமதமாகின

Post a Comment

0 Comments