அமெரிக்க செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகராக சென்னையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை டிரம்ப் நியமித்து வருகிறார். இந்நிலையில் இந்திய - அமெரிக்க தொழிலதிபரும் எழுத்தாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து அமெரிக்காவுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கையை வடிவமைப்பார் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன் நாட்டிற்கு சேவை செய்யவும் AIயில்தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையை உறுதிப்படுத்தவும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் தளத்தை மஸ்க் வாங்கியவுடன் அதன் பிரதமநிறைவேற்று அதிகாரியாக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?
ஸ்ரீராம் கிருஷ்ணன் ஒரு சென்னை பையன். சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீராம் 90களில் பிறந்த பெரும்பாலான இந்தியர்கள் இன்ஜினியர்களாக ஆவது போல ஸ்ரீராம் கிருஷ்ணனும் இன்ஜினியர் ஆனார். சென்னை SRMபொறியியல் கல்லூரியில் பி.டெக் படிப்பை முடித்தார். தொழில்நுட்பத் துறையில் தன்னை மேம்படுத்திக்கொண்டு உலகின் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களான மெட்டா, மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்ளிட்ட பெரும்பாலான பிராண்டுகளில் பணியாற்றி இருக்கிறார். 21 வயதிலேயே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இவர் தொழில்நுட்ப துறையில் இருக்கும் நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் எக்ஸ் தளமாக மாறுவதற்கு முன்பே ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். ட்விட்டரின் டைம்லைன் மற்றும் புதிய ட்விட்டர் தளத்துக்கான UI உருவாக்கம் பார்வையாளர்கள் வளர்ச்சி ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தற்போது மெட்டாவாக பெயர் மாற்றம் செய்திருக்கும் ஃபேஸ்புக்கிலும் இவர் மொபைல் அப்ளிகேஷன்ஸ் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதில் பெரிய பங்காற்றியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் இவரின் பங்கு என்பது இன்று காட்சி விளம்பரங்களில் மிகப்பெரிய நெட்வொர்க்காக வளர்ச்சி பெற்றிருக்கிறது.
ஸ்ரீராம் கிருஷ்ணன் எக்ஸ் தளமாக மாறுவதற்கு முன்பே ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். ட்விட்டரின் டைம்லைன் மற்றும் புதிய ட்விட்டர் தளத்துக்கான UI உருவாக்கம் பார்வையாளர்கள் வளர்ச்சி ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தற்போது மெட்டாவாக பெயர் மாற்றம் செய்திருக்கும் ஃபேஸ்புக்கிலும் இவர் மொபைல் அப்ளிகேஷன்ஸ் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதில் பெரிய பங்காற்றியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் இவரின் பங்கு என்பது இன்று காட்சி விளம்பரங்களில் மிகப்பெரிய நெட்வொர்க்காக வளர்ச்சி பெற்றிருக்கிறது.
0 Comments