Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Udpdate: துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி...!



கல்கிஸ்ஸை, சிறிபால மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் கல்கிஸை – படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.

கல்கிஸ்ஸை, சிறிபால மாவத்தையில் மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மற்றைய சந்தேகநபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments