
நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இலங்கை அரசாங்கம் கடந்த ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான எடுத்த முடிவைத் தொடர்ந்து, இவ்வாறு முதல் தொகுதி வாகனங்கள் வந்தடைந்தன.
பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட நீண்டகால இறக்குமதித் தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் வாகனத் துறையில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, புதிய விதிமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் உள்ளூர் சந்தையில் 24.5 மில்லியன் ரூபாய் முதல் 26 மில்லியன் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 31, 2025 திகதியிட்ட 2421/44 என்ற வர்த்தமானி அறிவிப்பு மூலம், 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த வாகன இறக்குமதி மீதான தற்காலிக இடைநீக்கத்தை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக நீக்கியது.
கோவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2021ஆம் ஆண்டில் வாகன இறக்குமதியை நிறுத்த அப்போதைய இலங்கை அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
நன்பகத்தன்மை மற்றும் உடனுக்குடன் செய்திகளுக்கு..!👇
-------------------------------------------------------------------------------------------------
Join Our Group:
WhatsApp Channel
0 Comments