காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதம்!
கந்தகுளிய பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
நேற்று (02) பிற்பகல் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான காற்றாலை மின் கோபுரத்தின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோபுரம் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், அருகிலுள்ள இரண்டு வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் மின் கோபுரம் இடிந்து விழுந்த சந்தர்ப்பத்தில் வீடுகளில் யாரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments