
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சனிக்கிழமை (03) மாலை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் நோக்கி புறப்பட்டார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை ஹனோயில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சென்றடைந்தார்.
அங்கு வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினரும் வெளியுறவிவகார பிரதி அமைச்சருமான நுயென் மான் குவோங் உள்ளிட்ட சிரேஷ்ட வியட்நாமிய அதிகாரிகளால் ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினர் வரவேற்கப்பட்டனர்.
வரவேற்பு விழாவில் இலங்கைக்கான வியட்நாமிய தூதர் டிரின் தி டாம், வியட்நாமிற்கான இலங்கைத் தூதர் போஷித பெரேரா மற்றும் ஹனோயில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், இன்றைய தினம் முதல் 06 ஆம் திகதி வரை அவர் இவ்விஜயத்தில் இணைந்திருப்பார்.
0 Comments