Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அகமதாபாத் விமான விபத்து! பயணிகள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை


அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி பயணித்த போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகளுடன் விபத்துக்குள்ளானமை தொடர்பில் Air India விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விமாத்தில் 242 பயணிகள் சென்ற நிலையில் அதில் பயணித்த பயணிகள் தொடர்பில் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தின் போது விமானத்தில், 169 இந்தியர்களும், 53 பேர் பிரித்தானிய நாட்டவர்களும், 1 கனடா நாட்டவரும் மற்றும் 7 பேர் போர்த்துக்கள் நாட்டவர்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அகமதாபாத் - மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது

விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அகமதாபாத் விமான விபத்து! பயணிகள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை | Plane Crashes Ahmedabad 242 Passengers On Board

விமானத்தின் ஆரம்ப ADS-B தரவு, விமானம் அதிகபட்சமாக 625 அடி (விமான நிலைய உயரம் சுமார் 200 அடி) காற்றழுத்தமானி உயரத்தை எட்டியதாகவும், பின்னர் அது நிமிடத்திற்கு -475 அடி செங்குத்து வேகத்தில் கீழே இறங்கத் தொடங்கியதாகவும் காட்டுவதாக flightradar24அறிக்கை வெளியிட்டுள்ளது


Post a Comment

0 Comments