
நச்சு பங்கசை அமெரிக்காவுக்குள் கடத்தியதாக இரண்டு சீன விஞ்ஞானிகள் மீது என்.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.
யுன்கிங் ஜியான் (வயது 33), ஜூன்யோங் லியு (வயது 34) ஆகிய இருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க சட்ட மாஅதிபர் அலுவலகம் சதி, கடத்தல் மற்றும் விசா மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றுக்கு நோயை ஏற்படுத்தும் ‘ஃபுசாரியம் கிராமினேரம்’ என்ற பங்கசை அமெரிக்காவிற்குள் கடத்த இவர்கள் சதி செய்ததாக சட்டத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டொலர் இழப்பை விவசாயத்திற்கு ஏற்படுத்தக்கூடிய இந்த பங்கசு மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, ஈரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளுக்கு துணைபுரியக்கூடியது என்றும் அத்திணக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இரண்டு விஞ்ஞானிகளும் ஏற்கனவே சீனாவில் பங்கசு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர்கள் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
0 Comments