
காசாவின் தென்பகுதியில் உள்ள உணவுவிநியோக மையத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 20 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் "குழப்பமான மற்றும் ஆபத்தான சூழ்நிலையின் மத்தியில்" உணவு பெற முயன்ற இருபது பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் பகுதியில் உள்ளல் நடந்த "துயரமான சம்பவத்தில்" பத்தொன்பது பேர் மிதித்து கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று காசா மனிதாபிமான அறக்கட்டளை தெரிவித்துள்ளது..
ஹமாஸ் ஆதரவாளாகள் சிலர் தூண்டிய குழப்பம் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன என அறக்கட்டளை தெரிவித்துள்ளது
எனினும் இதனை உடனடியாக உறுதிசெய்யமுடியவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.
0 Comments