
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் மீனவர் ஒருவருக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments