Trending

6/recent/ticker-posts

Breaking Updates: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பில்...!



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த விஜயம் செப்டம்பர் 22 மற்றும் 23, 2023 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்டது, மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட 10 பேர் இந்த விஜயத்தில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Post a Comment

0 Comments