
இணையத்தளம்,தொலைபேசிகள் வாயிலாக கடன் பெறுவது தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
தொலைபேசிகள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையைக் காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக அவதானித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பில் எதுவித முன்னறிவித்தல்களும் இன்றி கடன் வழங்கப்படுவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ஒரு சில நிறுவனங்கள் அதிகளவான வட்டியை வசூலிப்பதாகவும் தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மக்களை மனதளவில் பாதிப்படையச் செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குப்படுத்தல் முறைமையைக் கடைபிடிக்காமல் செயற்படுவதாகவும் கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குப்படுத்தல் முறைமையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே இவ்வாறு கடன் பெறும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.



0 Comments