Trending

6/recent/ticker-posts

Live Radio

அம்புலுவெவ கேபிள் கார் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுமா...?



அம்புலுவெவ பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள கேபிள் கார் திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதனை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.

அம்புலுவெவ பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.


தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டம் இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், குறித்த திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, அதன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

முறையான சூழலியல் ஆய்வு அறிக்கைகளுக்குப் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்தத் திட்டத்தினால் அம்புலுவெவ பிரதேசத்தின் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments