Trending

6/recent/ticker-posts

Live Radio

அறிவியலை வியக்க வைத்த சீனா...!



பூமியின் வரலாற்றில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின மற்றும் பேரழிவுகளில் இருந்து எவ்வாறு தப்பித்தன என்பதை விளக்கும் மிக முக்கியமான ஆதாரங்களை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள ஒரு குவாரியில் இருந்து 512 மில்லியன் ஆண்டுகள் பழமையான 'ஹுவாயுவான் பயோட்டா' (Huayuan Biota) எனப்படும் புதைபடிவத் தொகுப்பை அவர்கள் மீட்டுள்ளனர்.

இந்தத் தொகுப்பில் 16 முக்கிய விலங்குக் குழுக்களைச் சேர்ந்த 153 வகையான உயிரினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் 91 இனங்கள் (சுமார் 60%) அறிவியலுக்கு இதுவரை தெரியாத முற்றிலும் புதிய உயிரினங்களாகும்.

சுமார் 513.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் ஒட்சிசன் அளவு குறைந்ததால் ஏற்பட்ட 'சின்ஸ்க்' (Sinsk) எனும் மாபெரும் பேரழிவிற்குப் பிறகு, உயிரினங்கள் எவ்வாறு மீண்டெழுந்தன என்பதை இந்தப் புதைபடிவங்கள் விளக்குகின்றன.

மேலோட்டமான கடல் பகுதிகளில் வாழ்ந்த உயிரினங்கள் இந்தப் பேரழிவில் அழிந்த போதிலும், ஆழ்க்கடல் பகுதிகளில் வாழ்ந்த உயிரினங்கள் (ஹுவாயுவான் பயோட்டா போன்றவை) பாதுகாப்பாக இருந்ததை இது காட்டுகிறது.

பொதுவாக மென்மையான உடல் பாகங்கள் அழிந்துவிடும். ஆனால், இங்குள்ள புதைபடிவங்களில் உயிரினங்களின் கண்கள், குடல் பகுதிகள், செதில்கள் மற்றும் நரம்பு மண்டலங்கள் கூட சிதையாமல் அப்படியே பதிவாகியுள்ளன.

இந்த சீனப் புதைபடிவங்கள், கனடாவின் புகழ்பெற்ற 'பர்ஜஸ் ஷேல்' (Burgess Shale) புதைபடிவங்களுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளன.

இது அந்த ஆதிகாலத்திலேயே உயிரினங்கள் கடல் நீரோட்டங்கள் மூலம் கண்டங்கள் கடந்து பல ஆயிரம் கிலோமீற்றர் தூரம் பயணித்திருக்கலாம் என்ற புதிய உண்மையைப் புலப்படுத்துகிறது.

இதனை ஒரு 'உயிரியல் பெருவெடிப்பு' (Biological Big Bang) என விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர். இந்தப் புதைபடிவங்கள் பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதில் நிலவிய ஒரு பெரிய இடைவெளியை நிரப்பியுள்ளன.

Post a Comment

0 Comments