
தமிழ் நாட்டின் ஒன்பதாவது முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சந்திரசேகர் ஜோசப் விஜய் சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கான பதவிப் பிரமாணத்தை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், இந்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார்.
6000 காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் நிலையில், நமது எதிர்காலம் மகத்தான பொருளாதார வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
வலுவான இந்திய – இலங்கை கூட்டாண்மைக்குள் இணைந்து செயல்படுவதன் மூலம், மேலான செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.



0 Comments