Trending

6/recent/ticker-posts

Live Radio

ஆட்சிஅமைப்பதில் தொடரும் இழுபறி...!



தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதற்கு இன்றைய தினத்துக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் மக்களிடமே சென்றுவிடுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக முதல்வர் பதவி ஏற்பு இழுபறி நீடிப்பதால் விஜய் விரக்தி அடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆட்சியே வேண்டாம், யாருக்கும் அடிமையாக இருக்க தான் விரும்பவில்லை என்றும் பதவிக்காக யார் காலிலும் விழ தயாரில்லை என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக மீண்டும் மக்களிடமே தான் செல்வதாகவும் விஜய் உரத்த குரலில் கூறியுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தரப்புகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments