
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்கிடமாக இருப்பதால் ஐந்து பேர் கொண்ட விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் மரணப் பரிசோதனையை முன்னெடுக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இன்று (09) முற்பகல் மரணப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனையடுத்து, மரணப் பரிசோதனைக்கான சாட்சிகளை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், அன்னாரது உடலத்தை அவரது மனைவியின் மூத்த சகோதரியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.



0 Comments