
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக பத்து விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இன்று காலை 9.00 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments