
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக்கவை, விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக 1.2 பில்லியன் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.



0 Comments