Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வாழைச்சேனை மீனவர்கள் சென்ற படகு ஆழ்கடலில் விபத்து…!


வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற இயந்திரப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வாழைச்சேனை துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 2 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மூன்று மீனவர்கள் அம்பாந்தோட்டை ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

அம்பாந்தோட்டை பகுதியில் மீன்பிடித்து விட்டு வாழைச்சேனை துறைமுகம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த படகு வெள்ளிக்கிழமை (9)விபத்துக்குள்ளாகியுள்ளது.

அன்றைய தினம் கடலில் ஏற்பட்ட கொந்தழிப்பு காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக மீட்கப்பட்ட மீனவர் ஒருவர் வாழைச்சேனை துறைமுகத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

தாம் பயணித்த படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவில்லை என்றும் தன்னை அம்பாந்தோட்டை மீனவர்கள் காப்பாற்றியதாக மீட்கப்பட்ட மீனவர் தகவல் வழங்கியுள்ளார்.

இவ் விபத்தில் காணாமல்போன இரு மீனவர்களையும் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்ட மீனவரை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் துறைமுக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments