Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதல் படைகள் விரைவு...!


ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்தது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் டோங்கிரி கிராமத்திற்குள் கடந்த 1-ம் தேதி புகுந்த 2 பயங்கரவாதிகள் இந்து மதத்தினரின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த வீட்டின் அருகே பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில், சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனால், டோங்கிரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.

பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் ரஜோரியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதல் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 1 ஆயிரத்து 800 வீரர்கள் (18 குழுக்கள்) ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கூடுதல் படையினர் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments