Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 60 வயதுடைய நபர் ஒருவர் கைது.


11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல பிரதேச செயலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய இரத்தினபுரி பொலிஸாரினால் கடந்த 24 ஆம் திகதி குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

இரத்தினபுரி, ரக்வானவில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிலுள்ள சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பணிபுரிந்து வருபவர் என்றும், அவர் சிறுவர் இல்லத்தினது பராமரிப்பாளர் ஒருவரின் கணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறப்படும் சிறுமியொருவர் குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார்.

அவருக்கு 18 வயது பூர்த்தியானதன் பின்னர், குறித்த பராமரிப்பாளரின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலைக்கு சென்று வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி தற்போது கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, அரச சார்பற்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தின் பராமரிப்பாளரான, சந்தேகநபரின் மனைவி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரென தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையசந்தேகநபரை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ரல்மடுல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments