Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஜனாசாவை அடக்கம் செய்ய முற்பட்ட போது “இது புனித பூமி” என்று கூறி…


திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் உள்ள பொன்மலைக்குடா பகுதியில் உள்ள மையவாடியில் ஜனாசாவை அடக்கம் செய்யமுற்பட்ட போது புனித பூமி என்ற போர்வையில் பொலிஸார் இன்று(12)தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் அமைதியின்மை ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காணி அரிசி மலை பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள புனித பூமி என விகாராதிபதி தெரிவித்ததை அடுத்தே பொலிஸார் அங்கு சென்றதாகவும் இதன் பின்னர் உரிய தரப்புக்களுடன் அரச உயரதிகாரிகள் உடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின் குறித்த ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments