Trending

6/recent/ticker-posts

Live Radio

இரும்பு வேலி உடைந்ததில் மாணவன் கீழே விழுந்து படுகாயம்...!



பதுளை மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இரும்பு பக்க வேலி உடைந்தமையால் மாணவர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாவது மாடியில் இருந்து 15 அடி கீழே விழுந்து படுகாயமடைந்தவர் பதுளை பசறை வீதி 2 கனுவா பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவர் எனவும், அவர் பதுளையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் 2ஆம் ஆண்டில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நகரில் உள்ள ரேஸ்கோர்ஸ் வீதி மைதானத்தில் ரக்பி பயிற்சிக்காக தனது தாயாருடன் காலை சென்றதாகவும், பிற்பகல் தனது தாயாருடன் சில தேவைகளுக்காக பதுளை நகரிலுள்ள மத்திய வர்த்தக நிலையத்திற்கு வந்து இரண்டாவது மாடியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாவது மாடியில் இருந்த இரும்பு வேலியில் மாணவன் சாய்ந்து இருந்த போதே அந்த கம்பிவேலி உடைந்து விழுந்து விட்டதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments