Trending

6/recent/ticker-posts

Update: மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு...!



மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது, மின் கட்டணம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவு மற்றும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பொது மக்கள் கருத்துக்களை வெளியிடலாம்.

இலங்கை மின்சார சபை, அடுத்த 6 மாதங்களுக்கு கட்டண திருத்தம் செய்யப்படக்கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகளை அண்மையில் சமர்ப்பித்திருந்தது.

முன் மொழிவுகளுக்கு அமைய மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்மொழிவுகள் தொடர்பில் எழுத்துமூலம் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது.

வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி கண்டி பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கருத்துகளைப் பெற்ற பின்னர் ஜனவரி 17ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments