
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் அனுராதபுரத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பதற்கான பெரும் சாத்தியங்கள் காணப்படுவதுடன், இலங்கையின் முதல் இராசதானி மற்றும் முதலாவது குளம் கட்டப்பட்ட இடம் என்ற வகையில் வெளிநாட்டவரைக் கவரும் வகையில் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
சமூக மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த சமூகத்தை உருவாக்க "Clean Sri lanka" வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, நீர்ப்பாசன மற்றும் விவசாய பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார நவரத்ன, கலாநிதி சேன நாணயக்கார, சட்டத்தரணி ஏ.ஏ. ஜீவந்த பாக்ய ஸ்ரீ ஹேரத், திலின தாருக சமரகோன், பி.டி.என். பலிஹேன, ரோஹன பண்டார, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, அனுராதபுரம் மாவட்டச் செயலாளர் கே. ஜி. ஆர். விமலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments