
அருகம்பேயில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலிய நாட்டவர்கள் பொத்துவில் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (29) கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் தகவல்களின்படி, தாக்குதலில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள்.
இச்சம்பவம், இஸ்ரேலியர் இருவர் பயணித்த வாகனம் பாதையை அடைத்ததால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி பயணித்த வாகனத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, தாக்குதலில் முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 Comments