
ஐக்கிய தேசிய கட்சியின் 79வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த 6ம் திகதி இடம்பெறவிருந்த பொதுக்கூட்டம் ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை காரணமாக பிற்போடப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘ஒன்றாக இணைவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 Comments