
டிட்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக 1 இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது.
இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அவசர நிவாரண உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
புயலால் பாதிக்கப்பட்டு இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் இலங்கை மக்களுடன் சீன மக்களும் பங்கெடுத்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நிச்சயமாக இந்த அனர்த்தத்தில் இருந்து விரைவில் மீள்வார்கள் என நம்பிக்கை கொள்வதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
In recent days, severe floods and landslides triggered by Cyclone Ditwah have caused substantial casualties and extensive property damage in Sri Lanka. The people of China share the grief of those affected in Sri Lanka.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) November 30, 2025
To support the disaster relief efforts by Sri Lankan…



0 Comments