Trending

6/recent/ticker-posts

Live Radio

Weather Update: நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை...!



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கின்றது. இதன்படி, இன்று (14) நண்பகல் 12:10 மணிக்கு நாவலடி, பரந்தன், முரசுமோட்டை, வெள்ளிக்கண்டல், உடப்பத்துக்கண்டல் மற்றும் புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சி கொடுக்கவுள்ளது.

Post a Comment

0 Comments