ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் சாத்தியமான புதிய ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், போரில் வெற்றி பெற்றது ஈரான்தான் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
வெளியான தகவல்களின்படி, அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, லெபனானையும் உள்ளடக்கி அனைத்து முனைகளிலும் நடைபெற்று வரும் போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இணக்கம் எட்டப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்குவதுடன், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேவேளை, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான விவகாரங்கள் உடனடியாக அல்லாமல், பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தை கட்டங்களில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 Comments