
2027 ஜனவரி முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம், இளைஞர்கள் இத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பிரான்சில் உள்ள அனைவரும் தங்கள் வயதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்குகிறது.
சிறுவர்களின் மனநலம் குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் இது போன்ற கட்டுப்பாடுகளை உருவாக்கி வரும் சூழலில் இச்சட்டம் வருகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
தனது பத்தாண்டு கால பதவிக்காலத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இதனை அறிமுகப்படுத்துவதாக அவர் உறுதியளித்திருந்தார்.
இந்தச் சட்டத்தின் நடைமுறைச் சாத்தியம் குறித்துச் சிலர் சந்தேகம் எழுப்பியிருந்தாலும், வயது சரிபார்ப்பை அமுல்படுத்துவதற்கான இணையவழித் தொழில்நுட்பக் கருவிகள் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதாக அரசு வலியுறுத்திக் கூறியுள்ளது.
இடதுசாரிகள் தரப்பிலிருந்து சில விமர்சனங்கள் எழுந்த போதிலும், பிரெஞ்சு செனட் மற்றும் தேசிய சட்டமன்றம் ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை அன்று இந்தத் தடையை ஏற்றுக்கொண்டன.
கடந்த சில மாதங்களாக ஐரோப்பா முழுவதும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஜூன் மாதத்தில், முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர்கெய்ர் ஸ்டார்மர், 2027 ஜனவரி முதல் இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.



0 Comments