
எதிர்வரும் ஒகஸ்ட் 28 ஆம் திகதி விண்வெளியில் ஓர் அரிய வானியல் நிகழ்வாகப் பகுதி சந்திரகிரகணம் நிகழவுள்ளது. இந்நிகழ்வின் போது நிலவின் 96 சதவீதப் பகுதி பூமியின் அடர் நிழலால் மூடப்பட்டு, வெறும் 4 சதவீத விளிம்பு மட்டுமே வெளிச்சமாக இருக்கும்.
வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே நிலவு சிவப்பு நிறத்தில் ஒளிரும். ஆனால், இம்முறை 96% பகுதி மறைக்கப்படுவதால் பகுதி கிரகணமாக இருந்தாலும் நிலவு 'ரத்தச் சிவப்பு' நிறத்தில் காட்சியளிப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
பூமியானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, அதன் வளிமண்டலம் வழியே ஊடுருவும் சூரிய ஒளி நிலவின் மீது பட்டு அதைச் சிவப்பு நிறமாக மாற்றுகிறது.
வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் மிகவும் தெளிவாகப் புலப்படும். சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவர்.
ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகள்.
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகள்.
இலங்கை நேரப்படி இந்த கிரகணம் ஒகஸ்ட் 28 காலை 8:04 மணிக்குத் தொடங்கி, காலை 9:43 மணிக்கு உச்சத்தை எட்டி, முற்பகல் 11:22 மணிக்கு நிறைவடைகிறது. கிரகணம் நிகழும் நேரம் இலங்கையில் பகல் பொழுதாக இருப்பதால் இதனை நம்மால் காண முடியாது.



0 Comments