Trending

6/recent/ticker-posts

Live Radio

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை



ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அத்துடன், இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த இரண்டு குற்றங்களுக்குமான தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Post a Comment

0 Comments