![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtLbRb7txD93AUIOIDfhyJmzdw_3Xp3TQxH-sbipt2pfP04tL2Dsa-d6cxUsTBejbzAqjCLXzs1shXcd6y_3CFTsTmiKYrowBsowMXNwLHkfWBuygzLY2WiREXCnoHemLmUD4IN5pA6psZZs9akeU-WUZ-dVD3JfMf1z4htY65ys_EF0wFYkek3Wx4/s16000/LOCAL.jpg)
2023 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் 6 ஆம் நாள் விவாததிற்காக நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமானது.
2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை சமர்ப்பித்தார்.
2023 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 3,415 பில்லியன்களாகவும் மொத்த செலவு 5,819 பில்லியன் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட 9.8 சதவீதத்திலிருந்து அடுத்த ஆண்டு 7.9 சதவீதமாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் 13 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
0 Comments